சிவகாசி பட்டாசுக் கிட்டங்கியில் தீவிபத்து!!

சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதை அடுத்து கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க 2 தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் தீயணைப்பு வீரர்களால் கிட்டங்கியை நெருங்க முடியவில்லை. 

Last Updated : Oct 20, 2016, 05:11 PM IST
சிவகாசி பட்டாசுக் கிட்டங்கியில் தீவிபத்து!! title=

விருதுநகர்: சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதை அடுத்து கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க 2 தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் தீயணைப்பு வீரர்களால் கிட்டங்கியை நெருங்க முடியவில்லை. 

கிடங்கில் தீப்பிடித்ததில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து. தீப்பிடித்துள்ள பட்டாசு கிடங்கின் அருகே உள்ள ஸ்கேன் மையத்தின் பின்பக்க ஜன்னலை உடைத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.  கிடங்கிற்கு அருகே இருந்த 15-க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் லாரிகள் தீயில் எரிந்து சாம்பலாகின. படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 10-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Trending News