அன்னிய செலாவணி மோசடி: தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு

Last Updated : Jun 8, 2017, 12:21 PM IST
அன்னிய செலாவணி மோசடி: தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு title=

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் டி.டி.வி. தினகரன் மீது இன்று எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

1996-ம் ஆண்டு ரூ.45.31 கோடி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக மத்திய அமலாக்கத்துறை தினகரன் மீது 2 வழக்குகளை பதிவு செய்தது. 20 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் தினகரனை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐ கோர்டில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டை விசாரித்த சென்னை ஐ கோர்ட் எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட் தினகரனை விடுவித்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. அத்துடன் இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்தது.

அதன்படி இன்று இன்று எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் நேரில் ஆஜரான தினகரன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அத்துடன் அவர் மீது கொடநாடு எஸ்டேட் நிறுவன பங்குகளை போலி நிறுவனம் மூலம் வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவுடன் நீதிபதி மலர்வதி வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Trending News