ஏழைகளுக்கு பரிசுகள் வழங்கிய ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள்

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று சென்னையில் ஏழைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Last Updated : Mar 4, 2018, 01:48 PM IST
ஏழைகளுக்கு பரிசுகள் வழங்கிய ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் title=

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று சென்னையில் ஏழைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பரிசை ரஜினிகாந்த் ரசிகர் குழு மற்றும் ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் வழங்கினர்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வுக்கான அடுத்த கட்ட ஆலோசனை வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

6-ம் தேதி தஞ்சை மாவட்டத்திலும், 
7-ம் தேதி திருச்சி மாவட்டத்திலும்,  
8-ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலும், 
9-ம் தேதி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி தெரிவித்தார். 

இதுவரை 9 மாவட்டங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending News