அதிர்ச்சி! பிறந்த 29 நாட்களே குழந்தை... மண்ணோடு மண்ணாக புதைத்த தாய் - நடந்தது என்ன?

புதுச்சேரி அருகே பிறந்த 29 நாட்களேயான குழந்தையை, பெண் ஒருவர் மதுபோதையில் இருந்த கணவனோடு சேர்ந்து, மதுபான கடையின் பின்புறத்தில் புதைத்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 16, 2023, 11:24 PM IST
  • குழந்தைக்கு தொடர்ச்சியாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
  • இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
அதிர்ச்சி! பிறந்த 29 நாட்களே குழந்தை... மண்ணோடு மண்ணாக புதைத்த தாய் - நடந்தது என்ன? title=

சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன்(32). இவரது மூன்றாவது மனைவி சங்கீதா(26). இவர்கள் பல இடங்களில் சென்று பழைய பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

தற்போது புதுச்சேரி கிருமாபாக்கம் அடுத்துள்ள மூர்த்திகுப்பம் பகுதியில் தங்கி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த மாதம் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. 

குழந்தைக்கு பபிதா என்று பெயர் சூட்டியுள்ளனர். பிறந்து 29 நாட்கள் மட்டுமே ஆகிறது. இந்நிலையில் நேற்று  இரவு ஊஞ்சலில் படுத்திருந்த இருந்த பபிதாவை காணவில்லை. இந்நிலையில், இன்று (ஏப். 16) காலை மனப்பட்டு வணப்பகுதி அருகே உள்ள மதுபானக் கடையின் பின்புறத்தில் மணற்பகுதியில்  பச்சிளம் குழந்தை ஒன்று புதைக்கப்பட்டு கை, கால்கள் வெளியே தெரிவதாக தகவல் பரவியது.

மேலும் படிக்க | 12 வயது சிறுமிக்கு ஆபாச படம்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

இதை அடுத்து தகவலறிந்த கிருமாம்பாக்கம் உதவி காவல் ஆணையர் விஜயகுமார், ஏட்டு பிரிமியர் ரமேஷ்  ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை  மீட்டனர். தொடர்ந்து விசாரணையில்  காணாமல் போன குழந்தை சங்கீதாவின் குழந்தை என்று தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய கிருமாம்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விசாரணையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த குழந்தை நேற்று இரவு இறந்து விட்ட நிலையில், என்ன செய்துவது என்று தெரியாமல் சங்கீதா தனது கணவருடன் சேர்ந்து அக்குழந்தையை மண்ணில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டு காணாமல் போனதாக நாடகமாடியது போலீசார் விசாரணை தெரிய வந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"சங்கீதாவுக்கு கடந்த மாதம் வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. அப்பகுதி மக்கள் இதுகுறித்து கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு தகவல் கூறினர்.
மருத்துவ குழுவினர்  குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து குழந்தையின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

அதன்படி சங்கீதா தனது கணவருடன் ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்று, சில நாட்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சுய விருப்பத்தின் பேரில் குழந்தையை அழைத்து வந்தனர். மீண்டும் குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் அவர்கள் கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு குழந்தை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்துள்ளனர். அந்த மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அங்கேயும் அவர்கள் தங்கள் குழந்தையை 'எங்களிடம் விட்டு அனுப்புங்கள் நாங்கள் செல்கிறோம்' என கூறி குழந்தையை அழைத்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று (ஏப். 15) இரவு சங்கீதா குழந்தைக்கு பால் கொடுத்த போது கை, கால்கள் குளிர்ச்சி அடைந்து நிலையில் குழந்தை இறந்து போனது. சங்கீதா தனது கணவர் குடிபோதையில் இருந்த நிலையில் அவரை அழைத்துச் சென்று அருகில் பள்ளம் தோண்டி  குழந்தையை மண்ணில் புதைத்துள்ளனர்" என்றனர்.

மேலும் படிக்க | கரூர்: பைனான்சியரை ஏமாற்றிய கல்யாண ராணி - டிக்டாக்கில் போட்ட ஸ்கெட்ச்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News