சினிமா பாணியில் கொள்ளை; 1.4 லட்சம் ரூபாயை பறி கொடுத்த முதியவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில், வீடு கட்ட சேமித்து வைத்திருந்த பணம் பறிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட முதியவர் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2021, 11:51 AM IST
  • புதுக்கோட்டையில் சினிமா பாணியில் கொள்ளை.
  • கணக்கில் இருந்து 1.4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முதியவர்.
  • சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டதில் வெளியான அதிர்ச்சி சம்பவம்.
சினிமா பாணியில் கொள்ளை; 1.4 லட்சம் ரூபாயை பறி கொடுத்த முதியவர் title=

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த பணம் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு கட்ட சேமித்து வைத்திருந்த பணம் பறிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட முதியவர் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற முதியர்,   வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை பேங்கில் டெபாஸிட் செய்திருந்தார். இந்நிலையில்,  வீடு கட்டுல் செலவிற்காக கணக்கில் இருந்து 1.4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முதியவரை பின்தொடர்ந்த மூன்று மர்ம நபர்கள் அவரை திசை திருப்ப சாலையில் பணத்தை போட்டனர். பணத்தை போட்டு முதியவரை திசைதிருப்பி அவரிடமிருந்து 1.4 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம்  சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

ALSO READ | திண்டுக்கல்லில் பயங்கரம்! பெண் தலையை வீட்டு வாசலில் வீசிய கொலையாளிகள்

வங்கியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு தனது சைக்கிளில் வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில், அவரை பின்தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், முதியவரை திசை திருப்ப சாலையில் பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டுகளை கீழே போட்டனர். 

இதனை எடுக்க முதியவர் ரகுபதி சென்ற போது, அவர் சைக்கிளில் வைத்திருந்த 1.4 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  கீழே கிடந்த நோட்டுகளை எடுத்துக் கொண்டு மீண்டும் இருந்த இடத்திற்கு திரும்பிய முதியவர் ரகுபதி தான் வைத்திருந்த 1.4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனேயே, அருகே உள்ள காவல் நிலையத்தில் நடந்தவற்றை எடுத்துக் கூறி புகார் கொடுத்துள்ளார். 

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை செய்த போலீசார் அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மர்ம நபர்கள்  சைக்கிளில் வந்த முதியவரை திசைதிருப்பி, சினிமா பாணியில் 1.4 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
இதனையடுத்து முதியவரிடம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

ALSO READ | Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News