தமிழகத்தில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும்!!

தெற்கு உள் கர்நாடகம் முதல் குமரி கடல்வரை காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளதால் மழைக்கு வாய்ப்பு!!

Last Updated : Apr 10, 2019, 02:50 PM IST
தமிழகத்தில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும்!!  title=

தெற்கு உள் கர்நாடகம் முதல் குமரி கடல்வரை காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளதால் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை: தமிழகத்தில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கில் கர்நாடகம் முதல் குமரி கடல் வரை காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வேலூர்,திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

மேலும் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகாவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகப்பட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஆயக்குடி மற்றும் தென்காசியில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News