ஜல்லிக்கட்டு: வாடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Last Updated : Jan 22, 2017, 10:57 AM IST
ஜல்லிக்கட்டு: வாடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம் title=

நத்தம்: ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அலங்காநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜல்லிகட்டுக்கு நிரந்தர தீர்வு தான் வேண்டும் எனக்கூறி வாடிவாசலை முற்றுகையிட்டு அக்கிராம மக்கள், பெண்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனையடுத்து வாடிவாசலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு கொண்டு வர வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனக்கூறி அக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Trending News