சித்தியடைந்தார் ஜெயேந்திரர்! மடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது உடல்

காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவு காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் 

Last Updated : Feb 28, 2018, 09:54 AM IST
சித்தியடைந்தார் ஜெயேந்திரர்! மடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது உடல் title=

காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவு காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார் ஜெயேந்திரர். கடந்த மூன்று மாதங்களாகவே உடல் நல குறைவுடன் காணப்பட்டு வந்துள்ளார் ஜெயேந்திரர்.

காஞ்சி மடத்தின் 69வது சங்கராச்சாரியாராக இருந்தவர் ஜெயந்திரர். இவருக்கு வயது  82. இவருடைய இறப்பை அறிந்த பக்தர்கள், மற்றும் பொதுமக்கள்  அதிருப்தி  அடைந்துள்ளனர்.

தற்போது அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து காஞ்சி சங்கரமடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது 

 

 

Trending News