என்னை திருமணம் செய்தால் அரசு வேலை... 8 திருமணம் செய்து மோசடி செய்த பலே பெண்!

கரூரில் அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி 50-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Sep 17, 2022, 10:10 AM IST
  • அரசு வேலை வாங்கித்தருவதாக 50க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய பெண்
  • ரூ.10 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்த கல்யாண பெண்
என்னை திருமணம் செய்தால் அரசு வேலை... 8 திருமணம் செய்து மோசடி செய்த பலே பெண்! title=

கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் வசித்து வரும் சபரி (எ) சௌமியா என்ற பெண் பல்வேறு மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட இந்த பெண் கரூர் பகுதியில் பதுங்கி இருப்பதை தெரிந்துக்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள், சௌமியா -வை கண்டறிந்து குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கரூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிவக்குமார் கூறுகையில், 

மின் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சௌமியா பலரிடம் பண மோசடி செய்துள்ளார். குறிப்பாக மின்துறை அமைச்சர் தனது உறவினர் என கூறி வேலை வாங்கி தருவதாக திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 50-க்கு மேற்ப்பட்டோரிடம், 10 லட்சத்திற்கு மேல் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி 

இந்த பெண் இவ்வாறு பல பொய்களை கூறி 8 நபர்களை திருமணம் செய்துள்ளார். ஏற்கெனவே திருமணம் முடிந்து கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும், மறு திருமணத்திற்கு தான் தயாராக இருப்பதாகவும் சௌமியா தெரிவித்து என்னையும் திருமணம் செய்ய முயன்றார்.

தன்னை திருமணம் செய்து கொண்டால் எனக்கும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார். மேலும் எனது நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முன்பணமாக 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். 

திருமணத்திற்கு முன்பு பெண்ணை பற்றி விசாரிக்க பெண்ணின் புகைப்படம் கொடுத்து உறவினரிடத்தில் விசாரித்து கூறச்சொன்னேன். என் உறவினர் அப்பெண் முன்னதாக தனது குடும்பம், வீடு எனக் கூறிய வீடிற்கு சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு அப்பெண் யார் என்று தெரியவில்லை. 

இதனால் என் உறவினர்கள் என்னை எச்சரித்தனர். பின்னர் சௌமியா குறித்து விசாரித்தபோதுதான் அவர் இதற்கு முன்பு 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்பது தெரிய வந்தது.

இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இது குறித்து கரூர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய அம்சம்: மக்கள் ஹேப்பி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News