7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி

7th Pay Commission: பண்டிகைக் காலத்தில் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படும் அகவிலைப்படி (டிஏ உயர்வு) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் மற்றொரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 14, 2022, 10:53 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக நல்ல செய்தி உள்ளது.
  • ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்கள் சுற்றுலா / பயிற்சி / இடமாற்றம் / பணி ஓய்வு பெறும்போது தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்யலாம்.
7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி title=

7வது ஊதியக்கமிஷன் பயணப்படி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக நல்ல செய்தி உள்ளது. ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆம், பண்டிகைக் காலத்தில் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படும் அகவிலைப்படி (டிஏ உயர்வு) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் மற்றொரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. புதிய விதியின்படி, மத்திய அரசு ஊழியர்கள் சுற்றுலா / பயிற்சி / இடமாற்றம் / பணி ஓய்வு பெறும்போது தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்யலாம். தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்வது சதாப்தி ரயிலுக்கு இணையாக கருதப்படும்.

ஊழியர்கள் தேஜஸ் எக்ஸ்பிரஸ் மூலம் பயணிக்கலாம்

இது தொடர்பான தகவல்கள் 12 செப்டம்பர் 2022 அன்று செலவினத் துறையால் (DoE) வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலக குறிப்பில், ஊழியர்கள் தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது மத்திய அரசு ஊழியர்கள் சுற்றுலா / பயிற்சி / இடமாற்றம் / பணி ஓய்வு காலத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய முடியும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில், பயணப்படி தொடர்பான தகவல்கள் மத்திய சிவில் சேவைகள் (திருத்தப்பட்ட ஊதியம்) விதிகள், 2016 இல் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் நவராத்திரி பரிசு, டிஎ ஹைக் அப்டேட் இதோ!! 

டிக்கெட் தொகையை திரும்பப்பெற (ரேயெம்பர்ஸ்மெண்ட்) அனுமதி

2017 அலுவலக குறிப்பாணையின்படி, அரசு அதிகாரிகள் பிரீமியம் ரயில்கள் / பிரீமியம் ததகால் ரயில்கள் / சுவிதா ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இது தவிர, அதிகாரபூர்வ சுற்றுப்பயணம்/பயிற்சியின் போது சதாப்தி/ராஜ்தானி/துரந்தோ ரயில்களில் பிரீமியம் தட்கல் கட்டணம் மற்றும் டைனமிக்/ஃப்ளெக்ஸி டிக்கெட்டுகளுக்கான டிக்கெட் தொகையை திரும்பப்ப் பெறவும் துறை அனுமதித்துள்ளது.

யாருக்கு எந்த வகுப்பில் பயணம் செய்ய வசதி? 

- பே மேட்ரிக்ஸில் பே லெவல் 12 மற்றும் அதற்கு மேல்: எக்ஸிகியூட்டிவ் / ஏசி முதல் வகுப்பு / பிரீமியம் தத்கால் / சுவிதா / சதாப்தி / ராஜ்தானி ரயில்.

- பே மேட்ரிக்ஸில் பே லெவல் 6 மற்றும் அதற்கு மேல்: ஏசி இரண்டாம் வகுப்பு / சேர் கார் (சதாப்தி ரயில்)

- பே மேட்ரிக்ஸில் பே லெவல் 5 மற்றும் அதற்கு மேல்: ஏசி மூன்றாம் ஆம் வகுப்பு / சேர் கார் கார்

விரைவில் 38 சதவீத அகவிலைப்படி உறுதி செய்யப்படும்

மறுபுறம், மத்திய ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை முதல் வழங்கப்பட உள்ளது. இதில் 4 சதவீத உயர்வு நிர்ணயிக்கப்படும் என நம்பப்படுகிறது. ஆனால் இது வரை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 4 சதவீதம் அதிகரித்த பிறகு, அது 38 சதவீதமாக மாறும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 28 ஆம் தேதியன்று அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 2023 ஜனவரியில் மீண்டும் சம்பள உயர்வு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News