மனைவிக்கு அடிக்கடி ராங்க் கால் - தட்டிக்கேட்டவரை குத்திப்போட்ட கும்பல்!

மனைவியின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி கால் செய்து தொல்லை ;  அதை தட்டிகேட்ட கணவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தின் முழு பின்னணி இதோ....

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 1, 2022, 03:13 PM IST
  • மனைவிக்கு செல்போனில் தொல்லை
  • தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடுமை
  • கொடூர செயலில் ஈடுபட்ட 3பேர் கைது
மனைவிக்கு அடிக்கடி ராங்க் கால் - தட்டிக்கேட்டவரை குத்திப்போட்ட கும்பல்! title=

மதுரை காமராஜர்புரம் திருவிக தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். 40 வயதான இவர் அலுமினிய பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்த ராஜேஷ்குமாரை, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினர்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ராஜேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனே கொலை வழக்காக மாற்றி எழுதிய காவல்துறையினருக்கு கொலைக்கான காரணம் குறித்து தெரியவந்தது. 

 Crime,Murder,Madurai,rajesh,arrest,மனைவிக்கு செல்போனில் தொல்லை,மருது,தக்காளி சதீஷ்

கொரோனா காலகட்டத்தில் தனது வீட்டிற்கு கிருமி நாசினி தெளிக்க வந்த தனியார் ஒப்பந்த பணியாளர் மருது என்ற மருது சூர்யாவுக்கும், கொல்லப்பட்ட ராஜேசுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ்குமாரின் மனைவிக்கு, மருது சூர்யா.... தான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை வாங்கித் கொடுத்துள்ளார். சில மாதங்கள் வேலைக்கு சென்ற வந்த மனைவியை வேலைக்குச்செல்ல வேண்டாம் என்று கூறி ராஜேஷ்குமார் நிறுத்தி விட்டார். ஆனால் மருது நிறுத்தவில்லை. தொடர்ந்து ராஜேஷின் மனைவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்திருக்கிறார்.

 Crime,Murder,Madurai,rajesh,arrest,மனைவிக்கு செல்போனில் தொல்லை,மருது,தக்காளி சதீஷ்

இதனால் விரக்தியடைந்த பெண், கணவரிடம் நடந்ததைச் சொல்லி புலம்பியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், மருது சூர்யாவை தட்டி கேட்டிருக்கிறார். இதில் அவமானமடைந்ததாக நினைத்த மருது சூர்யா தனது நண்பர்களான வண்டியூரைச் சேர்ந்த சந்தோஷ், தக்காளி சதீஷ் ஆகியோருடன் சேர்ந்து ராஜேஷை கொல்ல திட்டமிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | தண்டனை வழங்கிய பெண் உயர் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு - இளநிலை உதவியாளர் கைது

அதிகாலையில் மூவரும் ராஜேஷ் வீட்டுக்குச்சென்று கதவைத் தட்டியுள்ளனர், சப்தம் கேட்டு கதவைத் திறந்த ராஜேஷை தக்காளி சதீஷ், சந்தோஷ் இருவரும் பிடித்துக்கொள்ள ராஜேஷ்குமார் கத்தியால் பலமுறை குத்தி ஆத்திரத்தை தீர்த்து கொண்டார். பிறகு அங்கிருந்து மூவரும் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த மூவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ‘ஒரு நண்பன் இருந்தால் ; ஒரு நண்பன் இருந்தால்’ - சும்மாவா சொன்னாங்க!

மனைவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்தவரை தட்டி கேட்ட கணவர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News