மீனாட்சி பொண்ணுங்க: செம டிவிஸ்டு... தாலியை அறுத்து சக்தியை அவமானப்படுத்த பூஜா போடும் திட்டம்

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் திடீர் திருப்பமாக தாலியை அறுத்து சக்தியை அவமானப்படுத்த பூஜா திட்டம் போடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

Written by - S.Karthikeyan | Last Updated : May 1, 2023, 03:38 PM IST
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் அடுத்த டிவிஸ்ட்
  • தாலியை அறுத்து சக்தியை அவமானப்படுத்த திட்டம்
  • பூஜா போடும் இந்த திட்டம் நிறைவேறுமா?
மீனாட்சி பொண்ணுங்க: செம டிவிஸ்டு... தாலியை அறுத்து சக்தியை அவமானப்படுத்த பூஜா போடும் திட்டம்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வெற்றி கல்யாண மண்டபத்தில் குடிபோதையில் தகராறு செய்ய திடியன் சக்திக்கு இந்த விஷயத்தை சொல்ல அவள் உடனடியாக மண்டபத்துக்கு கிளம்பி வருகிறாள். ரங்கநாயகி நீ எங்கேயும் போக வேண்டாம், உனக்கு இங்கேயே ரூம் போட்டு இருக்கு.. வெற்றியை கூட்டிட்டு போய் படுக்க வை என சொல்ல சக்தி வெற்றியை ரூமுக்கு அழைத்துச் செல்கிறாள். 

மேலும் படிக்க | அஜித் ’V’ என்ற எழுத்தில் படங்களின் பெயர்களை வைக்க என்ன காரணம்? மறைந்திருக்கும் ரகசியம் என்ன?

ரூமுக்கு போன வெற்றி அது சக்தி என தெரியாமல் நான் சக்தியை அவ்வளவு காதலிச்சேன் ஆனா அவ என்ன தூக்கி போட்டு போயிட்டா என அழுது புலம்ப இதைக் கேட்டு சக்தியும் கலங்கி துடிக்கிறாள். மறுநாள் காலையில் யமுனா துர்கா மற்றும் நீதிமணி என மூவரும் கார் ஒன்றில் மண்டபத்திற்கு கிளம்பி வருகின்றனர்.  புஷ்பாவும் சங்கிலியும் இதை மறைந்திருந்து பார்க்க சங்கிலி அவங்க போறாங்க இப்ப என்ன பண்றது என கேட்க புஷ்பா அவங்க மண்டபத்துக்கு போக மாட்டாங்க ஏன்னா அந்த கார் டிரைவர் நம்முடைய ஆள் என சொல்கிறாள்.

அடுத்து சாந்தா இந்த கல்யாணம் நடக்கக்கூடாது அதுக்காக என் உயிரை கூட கொடுப்பேன் என கடவுளிடம் வேண்டி விட்டு மண்டபத்திற்கு கிளம்புகிறாள். மண்டபத்தில் சக்தி எல்லோருக்கும் கூல்ட்ரிங்ஸ் கொடுத்து கொண்டிருக்கும் போது பூஜாவின் அம்மா மண்டபத்துக்கு வந்து எங்க அந்த சக்தி என கேட்க அங்க பாரு என பூஜா சொல்ல சக்தி எந்தவித கவலையும் இல்லாமல் இருப்பதை பார்த்து அவ மேல ஒரு கண்ணு இருக்கட்டும். இந்த கல்யாணம் முடிந்ததும் வெற்றி கையால் அவ கழுத்தில் இருக்கும் தாலியை அறுத்து தர தரனு இழுத்துச் சென்று வெளியே தள்ளி அசிங்கப்படுத்த வேண்டும் என திட்டமிடுகின்றனர். 

இதைக் கேட்ட சரண்யா செய்வதறியாது தவிக்கிறாள். அதன் பிறகு ரூமுக்கு சென்று சக்தி கர்ப்பம் இல்லை நான்தான் கர்ப்பமாக இருக்கிறேன் இந்த கர்ப்பத்தை கலைக்க போவதாக லெட்டர் எழுதிவிட்டு வேகவேகமாக யாருக்கும் தெரியாமல் மண்டபத்தை விட்டு வெளியே செல்ல கணக்குப்பிள்ளை இதைப் பார்த்துவிட்டு லெட்டரை எடுத்து வந்து சக்தியிடம் சரண்யா அவசர அவசரமாக வெளியே சென்ற விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்ட சக்தி அதிர்ச்சி அடைந்து அப்படியே நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | 20க்கும் மேற்பட்ட படங்கள்..2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News