மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 8400 கனஅடியில் இருந்து, 8900 கன அடியாக அதிகரித்துள்ளது!

Last Updated : Jul 30, 2019, 08:29 AM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு! title=

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 8400 கனஅடியில் இருந்து, 8900 கன அடியாக அதிகரித்துள்ளது!

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 8,400 கன அடியில் இருந்து 8,900 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.49 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 15.67 டி.எம்.சி. ஆக உள்ளது. அதேவேளையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

கர்நாடக உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பருவ மழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் வழக்கத்தை விடவும் குறைவான மழை அளவே பதிவாகியுள்ளது. எனினும் அண்டை மாநிலங்களாக கர்நாடகா மற்றும் கேரளாவில் மழையின் தாக்கம் குறையவில்லை. 

கேரளாவில் பருவ மழை சற்று தாமதமாகவே துவங்கிய போதிலும், காசர்கோடு, கன்னூர் போன்ற மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு கன மழை விஜயம் செய்தது. கர்நாடகாவில், பாதிப்பு ஏற்படாத வகையில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகள், போதுமான தண்ணீரை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News