இன்றைய வானிலை முன்னறிவிப்பு: அடுத்த இரு நாட்களுக்கு கனமழை!

அடுத்த இரு நாட்களுக்கு சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...!

Last Updated : Jul 1, 2019, 03:49 PM IST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: அடுத்த இரு நாட்களுக்கு கனமழை! title=

அடுத்த இரு நாட்களுக்கு சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...!

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெப்ப சலனம் மற்றும் காற்று மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 1 செண்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News