இனி E-PASS தேவையா? இல்லையா? முக்கிய ஆலோசனையில் தமிழக அரசு

ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தமிழ் நாட்டில் இ-பாஸ் முறையை விலகிக்கொள்வதா? இல்லை தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 24, 2020, 06:20 PM IST
இனி E-PASS தேவையா? இல்லையா? முக்கிய ஆலோசனையில் தமிழக அரசு title=

சென்னை: தனிநபர்கள் மற்றும் பொருட்களின் சரக்கு போக்குவரத்துக்கு மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளேயும் இயங்க எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இதனையடுத்து இன்று மதியம் 3 மணியளவில் தமிழக அரசு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் (District magistrate) தலைமைச்செயலாளர் சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ் நாட்டில் இ-பாஸ் முறையை விலகிக்கொள்வதா? இல்லை தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இ-பாஸ் (E-PASS)  நடைமுறையை விலக்கிக்கொண்டால் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது மிகச் சவாலாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  E-paas வாங்கித் தருகிறோம் எனக் கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் -எச்சரிக்கை

கொரோனா பரவத் தொடங்கிய பிறகு ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், வேறு மாநிலத்திற்குச் செல்வதற்கும் தமிழகத்தில் இ-பாஸ் (E-PASS) நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன் மூலம் ஊரடங்கு (Lockdown) காலத்தில் இ-பாஸ் பெற்ற பிறகு தான் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு, மாநிலத்திற்கும் செல்ல இயலும்.

Trending News