நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை!!

கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Last Updated : Mar 14, 2018, 08:25 AM IST

Trending Photos

நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை!! title=

கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரும்.

இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 14, 15-ம் தேதி அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளதை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுத்தேர்வு எழுத்தும் மாணவர்களை தவிர்த்து மற்ற பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தும்.

Trending News