பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்

பொது இடத்தில் குப்பையை கொட்டினால் ஆயிரம் அபராதம், அதனை போட்டோ எடுத்து போட்டு கொடுத்தால் ரூ.500 சன்மானம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 19, 2022, 11:37 AM IST
  • காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்ற தலைவரின் வித்தியாசமான முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்
  • குப்பை கொட்டினால் அபராதம்
பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம் title=

காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்ற தலைவரின் வித்தியாசமான முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள். அப்படி என்ன செய்துள்ளார் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்வோம். கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச்செல்ல தூய்மைப்பணியாளர்கள் உள்ளனர்.

அப்படியிருந்து பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச்செல்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டப்படும் இடங்களில் வைத்துள்ளார்.

மேலும் படிக்க | இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது: தொல் திருமாவளவன்

அதன்படி இந்த போர்டில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக்கொடுத்தால் அவர்களுக்கு ரூபாய் 500 சன்மானம் வழங்கப்படும் என அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன முயற்சியால் அந்த பகுதியில் ஸ்கடந்த சில தினங்களாக பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதில்லை.

நகர்மன்றக் கூட்டத்தில் விவாதமாகும் ‘குப்பைக்’ கதைகள்.!

மேலும் படிக்க | 'மதுரை வேட்பாளர் மோடி வெற்றி' - இணையத்தில் ஹிட் அடித்த பாஜகவினரின் பிறந்தநாள் போஸ்டர்

பொறுப்பில்லாம சாலையில் குப்பைய போடறியா? புடி ‘return gift’

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்றத்தலைவர் கூறுகையில், முதற்கட்டமாக நான்கு வார்டுகளில் மட்டுமே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதன்படிவ் பொதுமக்கள் இன்னும் ஒத்துழைப்பு வழங்கினால் அனைத்து வார்டுகளிலும் தங்களது தூய்மைப்பணி தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 'ஸ்டாலின் ஒரு பொம்மை... மகன், மருமகன், மனைவிதான் எல்லாம்...' - செங்கல்பட்டில் சீறியெழுந்த இபிஎஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News