ஓமைக்ரான் வைரஸ்: விமான நிலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2021, 10:20 PM IST
ஓமைக்ரான் வைரஸ்: விமான நிலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! title=

ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் 

மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து கடுப்பாடுகளுக்கு தற்போது எந்த வித அவசியமும் இல்லை.  தடுப்பூசி போடுவதில் நாட்டில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது.  முதல் தவனை தடுப்பூசி 78%, இரண்டாம் தவனை தடுப்பூசி 44% என்ற அளவில் உள்ளது.  கோவை தடுப்பூசி போடுவதில் மாநிலத்தில் முதலாவதாக உள்ளது.  தமிழகத்தில் டெங்குவிற்கு 617 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.  தடுப்பூசி போடுவதில் தமிழகம் ஒரு இயக்கமாக செயல்படு வருகிறது.  மேலும் தமிழக முதல்வரே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ALSO READ இந்தியாவில் நுழைந்துவிட்டதா Omicron? டெல்லிக்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளால் பீதி

தமிழகத்தில் 3.2 லட்சம் டேத்பாக்  கிட்டுகள் கையிருப்பில் உள்ளது.  மேலும் ஒரு லட்சம் கிட்டுகள் வரவழைக்கப்பட உள்ளது.  பொருளாதாரத்தில் பின் தங்கி வருபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக சோதனை செய்யப்படுகிறது.  தற்போது வரை தமிழகத்தில் ஒமைக்க்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை.  4 கோடி செலவில் உருவாக்கப்பட மரபணு சோதனை கூடமும் தமிழகத்தில் உள்ளது.

omigaran

ஒமைக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது.  எனவே மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.  மைக்ரான் வைரஸ் செய்தி அறிந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதல்வர் அறிவுறித்தினார்.  பல வகையான வைரஸ் உருமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனாவும் உருமாறியுள்ளது.  காலையில் மதுரை, திருச்சியை தொடர்ந்து தற்போது கோவை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர் டி பி சி ஆர் உள்ளிட்ட முழுமையான சோதனை செய்யப்படுகிறது.  பரிசோதனை முடிந்தும் வீட்டு கண்காணிபில் இருப்பார்கள் என தெரிவித்தார்.

ALSO READ இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News