பிரதமருடன் ஓபிஎஸ் சந்திப்பு; இரு அணிகளும் இணையுமா?

Last Updated : Aug 14, 2017, 12:16 PM IST
பிரதமருடன் ஓபிஎஸ் சந்திப்பு; இரு அணிகளும் இணையுமா? title=

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் மோடியை சந்தித்துள்ளார்.

முன்னதாக நேற்று மும்பையில் அமைத்துள்ள ஷீரடி சாய்பாபா கோவில், சனி சிங்கணாம்பூர் கோவில் ஆகிய இடங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்த பின்னர் இன்று காலை 11 மணி அளவில், பிரதமர் மோடியை சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளதால் நாளைக்குள் இரு அணிகள் இணைப்பு குறித்த முக்கிய முடிவு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இரு அணிகள் இணைப்பிற்கான வேலைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending News