பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated : Mar 5, 2017, 04:39 PM IST
பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்!!  title=

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்:-

கடந்த 2 நாட்களில் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழா நெருங்கும் நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீதான தாக்குதல் பெரும் கவலை தருகிறது. மீனவர் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News