தூத்துக்குடி அரசு மருத்துவரை கடத்தி கொலைவெறி தாக்குதல்: பஞ்சாயத்து தலைவர் கைது

கொலை வெறி தாக்குதலில் காயம் அடைந்த டாக்டர் முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 21, 2021, 09:32 AM IST
தூத்துக்குடி அரசு மருத்துவரை கடத்தி கொலைவெறி தாக்குதல்: பஞ்சாயத்து தலைவர் கைது title=

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). பல் மருத்துவரான இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 18ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் இருந்து வந்த இவரை வழிமறித்து வெள்ளை நிற காரில் மர்ம கும்பல் கடத்திச் சென்றுள்ளது. 

பின்னர், ஓட்டப்பிடாரம் அருகில் தோட்டத்தில் அடைத்து வைத்து கொடுவாள், அரிவாள், இரும்பு பைப், போன்ற ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் அவரிடம் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் மணி பர்சை அபகரித்துக் கொண்டு, பின்பு மீண்டும் அவரை காரில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கொண்டு விட்டுவிட்டு ஒரு மணி நேரத்தில் நீ தூத்துக்குடியை விட்டு ஓடிவிட வேண்டும் இங்கு நடந்ததை யாரிடமாவது கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் பூண்டோடு அழித்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அதே காரில் சென்றுவிட்டனர். 

ALSO READ | காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது

இதில் காயம் அடைந்த டாக்டர் முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவரும், ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலாளருமான இளையராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 

ALSO READ |  சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது

தாக்குதலுக்கு உள்ளான டாக்டர் மருத்துவமனையில் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் டாக்டரை காதலித்து வந்ததாகவும், இதனை அந்த பெண்ணின் தகப்பனார் கண்டித்துள்ளார். இதையடுத்து அவர் தனது நண்பரான ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜாவிடம் கூறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

ALSO READ |  பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News