ஜல்லிக்கட்டு: நாம் யாரென்று காட்டுவோம்- சிம்பு

தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தெரு முனைகளில் மக்கள் திரண்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நடிகர் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார். 

Last Updated : Jan 18, 2017, 11:05 AM IST
ஜல்லிக்கட்டு:  நாம் யாரென்று காட்டுவோம்- சிம்பு title=

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தெரு முனைகளில் மக்கள் திரண்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நடிகர் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார். 

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 39 மணி நேரத்திற்கு மேலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். 

இதையடுத்து நடிகர் சிம்பு தனது வீட்டின் முன்பு நடத்திய மவுனப் போராட்டம், தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஆர்ப்பரிக்க வைத்தது. 

தமிழகம் முழுவதும் தற்போது போராட்டம் பரவி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு இன்னொரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் முக்கிய சந்திப்புகளில் அமர்ந்து தொடர் போராட்டங்களை நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் யாரென்று காட்டுவோம், ஜல்லிக்கட்டு தடை நீங்கும் வரை போராடுவோம் என்றும் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார். 

 

 

 

Trending News