தூத்துக்குடியில் பயணிகள் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

தூத்துக்குடியில் இருந்து கோவை சென்ற பாஜக பிரமுகருக்கு சொந்தமான பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 26, 2022, 09:34 AM IST
  • பாஜக பிரமுகர் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு.
  • அதிஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
  • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் பயணிகள் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு! title=

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சென்ற, பாஜக பிரமுகருக்கு சொந்தமான பேருந்தின் மீது மர்ம நபர்களால் வீசபட்ட குண்டு வீச்சில் பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து தப்பி சென்ற குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் இருந்து கோவைக்கு செல்லக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் ஒபிசி அணியின் மாநில துணைத்தலைவர் ரமேஸ் என்பவருக்கு சொந்தமான தனியார் பேருந்து வழக்கமாக செல்லகூடிய நேரத்திற்கு திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்தது. 

மேலும் படிக்க | சென்னையில் 11 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

அங்கிருந்து பயனிகளை ஏற்றிக்கொண்டு கோவை செல்லவதற்காக தயார் நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்துன் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் உரிமையாளரான பாஜக பிரமுகர் ரமேஷ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்று குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டனர்.  தூத்துக்குடியில் பயணிகள் ஏற்றி சென்ற தனியார் பேருந்தான பாரதிய ஜனதா கட்சி பிரமுகருக்கு சொந்தமான பேருந்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம் - விசிக 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News