தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: வருகிறது நிவர் புயல், அதிகன மழைக்கான வாய்ப்பு

இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தமாக மாறி, மேலும் தீவிரமடைந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2020, 05:19 PM IST
  • தீவிரமாக உருவெடுத்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
  • புயல் 25ம் தேதியன்று மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும்.
  • இந்த புயலின் தாக்கத்தால், நவம்பர் 25 அன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கன மழை பெய்யும்.
தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: வருகிறது நிவர் புயல், அதிகன மழைக்கான வாய்ப்பு title=

சென்னை: வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைந்து நவம்பர் 25 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளைக் கடக்கக்கூடும் என்று வானிலைத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

நிவர் புயல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும் பகுதிகளில் அதிகன மழை பெய்யக்கூடும்.

இந்த புயல்  25 ஆம் தேதியன்று மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் தாக்கத்தால், நவம்பர் 25 அன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு சில பகுதிகளில் தீவிர மழைக்கான வாய்ப்பும் உள்ளது.

கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும், “தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் (Bay of Bengal), தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையிலும், புயல் கடலைக் கடக்கும் இடங்களிலும் நவம்பர் 25 ஆம் தேதி காற்று 100 கி.மீ வேகத்தில் வீசும்” என்று ஒரு புல்லட்டின் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீன்பிடிக்க ஏற்கனவே புறப்பட்ட மீனவர்களும் திரும்பி வருமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ALSO READ: இன்றைய வானிலை முனறிவிப்பு: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..!

நவம்பர் 23 முதல் தெற்கு தமிழகம், புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும். நவம்பர் 24 முதல் 26 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளிலும் காரைக்காலிலும் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

செய்திக்குறிப்பில், “தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதி சீற்றம் பெற்று அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தமாக மாறி, மேலும் தீவிரமடைந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நவம்பர் 25, நண்பகல் / பிற்பகலில் கடக்க வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

தென் கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் நவம்பர் 25 முதல் 26 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: JEE Main 2021: தேர்வு தாமதிக்கப்படுமா? மாணவர்களுக்கான முக்கிய தகவல்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News