தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2021, 01:44 PM IST
  • தென் மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
  • வட கடலோர மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை.
  • திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  title=

 

Tamil Nadu Rain: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென்மேற்கு பருவக்காற்றினாலும் தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர்,  திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின்  சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், தென் மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை  (Rain) பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . அதேபோல் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

நாளை மறுநாள் கோயமுத்தூர் ,தேனி ,நீலகிரி ,சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஈரோடு ,திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ,ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட நிலையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வருகின்ற 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ,தேனி, தென்காசி மாவட்டங்கள், சேலம் ,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

பிற  மாவட்டங்களில் பெரும்பாலும் வட மாநிலங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிர் செல்ஷியல் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

ALSO READ | Monsoon Alert: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை எச்சரிக்கை

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல் ,மத்திய வங்கக் கடல், கேரளா, லட்சத் தீவு பகுதி,கர்நாடக கடலோரப் பகுதி, அரபிக்கடலில், சில இடங்களில் மணிக்கு 40 கிமீ  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ | Mekedatu Dam Issue: அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News