வீட்டில் 'சாத்தான்' ? - மூதாட்டி மற்றும் இளம்பெண் மோசமான நிலையில் மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டில் சாத்தான் புகுந்ததாகக் கூறி 30 நாட்கள் உணவருந்தாமல் நோன்பு இருந்த மூதாட்டி மற்றும் முதுநிலை பட்டதாரி இளம்பெண் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 11, 2022, 08:09 PM IST
  • வீட்டில் சாத்தான் புகுந்ததாக கூறி விபரீதம்
  • 30 நாட்களாக உணவருந்தாமல் பட்டினி கிடந்தவர்கள்
  • மோசமான நிலையில் மீட்கப்பட்ட அவலம்
வீட்டில் 'சாத்தான்' ? - மூதாட்டி மற்றும் இளம்பெண் மோசமான நிலையில் மீட்பு title=

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேல மஞ்சம்பட்டி கிராமம். ஊருக்கு மத்தியில் இருக்கும் ஆரோக்கியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகாரளித்தனர். துர்நாற்றம் தானே அதற்கு ஒரு புகாரா என்ற நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்களை அடுக்கி வைத்தார்கள். மிரண்டு போன போலீசார் கையோடு புறப்பட்டார்கள். போலீசாரின் வாகனம் நுழைந்ததும் ஊர் மயானமானது. அரண்டு கிடந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள். கதவுகள் திறந்து கிடந்தது. துர்நாற்றமும் கடுமையாக வீசியது. வீட்டின் அறைக்குள் யாருமில்லாததால் வீட்டை சுற்றி சோதனையில் ஈடுபட, வீட்டின் பின்புறம் இரண்டு பெண்கள் சுருண்டு கிடந்தார்கள். அவர்களிடம் மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்தார்கள். 

முதுநிலை பட்டதாரி

57 வயதான இவரின் பெயர் ஆரோக்கியம்மாள். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையை கடத்தியிருக்கிறார். அருகே சுருண்டு கிடப்பது ஆரோக்கியம்மாளின் சகோதரி மகள் மார்க்ரேட் அந்தோணியம்மாள். சகோதரியின் இறப்புக்கு பின், மார்க்ரேட் அந்தோணியம்மாளை ஆரோக்கியம்மாள்தான் வளர்த்து வந்திருக்கிறார். 

முதுநிலை பட்டதாரி

வயது முதிர்ந்த ஆரோக்கியம்மாள் சுருண்டு கிடப்பதில் ஒரு அர்த்தமிருக்கிறது. 30 வயதே ஆன மார்க்ரேட் அந்தோணியம்மாள் ஏன் இப்படி நிலைகுலைந்து கிடக்கிறார் ? என்ற கேள்விக்கு போலீசார் விடை தேடினார்கள். ஆரோக்கியம்மாளும் மார்க்ரேட் அந்தோணியம்மாளும் கிட்டதட்ட 30 நாட்களுக்கு மேலாக உணவருந்தாமல் பட்னி கிடக்கிறார்கள். ஏன் இப்படியொரு ஒரு முடிவு.எல்லாம் மூட நம்பிக்கைதான். கடவுள் மீது அலாதியான நம்பிக்கை கொண்ட ஆரோக்கியம்மாள் அதே நேரம் சாத்தானின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். சவரியம்மாளின் ஆவி, சாத்தான் வடிவில் வீட்டில் புகுந்துள்ளதாகவும், அவரது தந்தை ஆரோக்கியசாமி தங்களுக்கு செய்வினை வைத்துள்ளதாகவும் கதை கூறினார்கள்.

மேல மஞ்சம்பட்டி

அதனால் தங்கள் மீது அசுத்த இரத்தம் படித்திருப்பதாகவும், அதைப் போக்கி தூய இரத்தம் பெற புனித வெள்ளியில் கர்த்தரிடம் நித்தரையடைய இருப்பதாகவும் தெரிவித்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்த ஆரோக்கியம்மாளின் தம்பி மரிய அருளும் அதை உறுதிப்படுத்தினார். வயதான ஆரோக்கியம்மாள்தான் முட்டாள்தனமான முடிவைக் கையில் எடுத்திருக்கிறார் என்றால், எம்.எஸ்.சி. பி.எட் பட்டதாரி ஆசிரியையான மார்க்ரேட் அந்தோணியம்மாளும் பட்டினி கிடந்தது பார்ப்போரை முகஞ்சுளிக்க வைத்தது. 

மேல மஞ்சம்பட்டி

மேலும் படிக்க | குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த 18 எளிய வழிகள்

இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆரோக்கியம்மாள், மார்க்ரேட் அந்தோணியம்மாள் இருவரும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மூடநம்பிக்கை ஒருவரை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கும் என்பார்கள்; சில சமயம் இதுபோன்ற அவலநிலைக்குத் தள்ளிவிடும் என்பதை இது உறுதிப்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | நிர்வாணமாக கிணற்றில் வீசிப்பட்ட பெண் சடலம் - வழக்கில் திடீர் திருப்பம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News