கோடநாடு வழக்கை CBI-க்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது SC....

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!  

Last Updated : Jan 25, 2019, 11:47 AM IST
கோடநாடு வழக்கை CBI-க்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது SC.... title=

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!  

கோடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தில் கோடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், கொள்ளைக்காக திட்டமிட்டது பற்றி தெரிவிக்கின்றனர். முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் குறிப்பிட்டுள்ளார்.

கோடநாடு சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்ட படுகொலை என்றும், கோடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்றும் வீடியோவில் பேசியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் குற்றம்சாட்டப்பட்டிருப்பதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால் சிபிஐ விசாரணை கோருவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி ஆனது. டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.  

 

Trending News