தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை... திருமணமாகி 3 நாள்களில் கொடூரம்!

Thoothukudi Couple Murder: திருமணமாகி மூன்றே நாள்களான தம்பதியை பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 3, 2023, 12:51 PM IST
  • இவருக்கும் கடந்த அக். 30ஆம் தேதி திருமணமாகி உள்ளது.
  • ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிகொலை செய்துள்ளதாக தகவல்.
  • மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை... திருமணமாகி 3 நாள்களில் கொடூரம்! title=

Thoothukudi Couple Murder: தூத்துக்குடியில் முருகேசன் நகரில் திருமணம் முடிந்த மூன்று நாட்களில் காதல் ஜோடியை பெண்ணின் உறவினர்கள் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிகொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த முதல்கட்ட தகவல்களை தொடர்ந்து காணலாம்.

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிசெல்வம்(23). இவர் ஷிப்பிங் கம்பெணி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சார்ந்த கார்த்திகா(23) என்ற பெண்னை காதலித்தார். இவர்களின் காதலுக்கு கார்த்திகாவின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் படிக்க | திருநெல்வேலி; குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கோரிக்கை

கடந்த மூன்று நாட்களுக்கு தேவர் ஜெயந்தி (அக். 30) அன்று கார்த்திகா வீட்டை விட்டு ஒடி வந்து மாரிசெல்வத்தை திருமணம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று (நவ. 2) மாலை வீட்டில் இருந்த மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரையும் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து, சராமரியாக வெட்டி கொலை செய்தனர். கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ரூரல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினர். இதில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பெண்ணின் உறவினர்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும், இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் மாரிசெல்வம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த கொலைவெறி சம்பவம் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் மற்றும் உறவினர்கள் கருப்பசாமி, பரத் ஆகிய  மூன்று பேர் உள்ளிட்ட சிலர் மீது சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படையினர் நவ. 3ஆம் தேதியாகிய இன்று கைது செய்தனர். தொடர்ந்து, மற்ற குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

தூத்துக்குடியில்  காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன காதல் ஜோடியே மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சராமரியாக வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | பாஜகவின் ஓபிசி மாநில அணி பொதுச் செயலாளராக திருச்சி சூர்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News