ஆட்டம் ஆரம்பம், தாராபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேனர் கிழிப்பு!

தாராபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு அக்கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 5, 2021, 10:50 AM IST
ஆட்டம் ஆரம்பம், தாராபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேனர் கிழிப்பு! title=

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம்சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைபற்றியது. மேலும் இதில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக மாநில தலைவரும் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான எல். முருகன் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். 

இதில் பாஜக (BJP) வேட்பாளரான எல். முருகனை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக (DMK) வேட்பாளர் கயல்விழியைவிட 1,393 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியை அடைந்தார்.

ALSO READ | கட்சியில் கடுமையான மாற்றங்கள் இருக்கும்: கட்சி நிர்வாகிகளை எச்சரித்தார் கமல்ஹாசன்

இந்நிலையில் எல்.முருகனுக்கு (L Murugan) வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அண்ணா சிலை அருகே அதிமுக நகர செயலாளர் டி.டி. கே.காமராஜ் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டி இருந்தது. அந்த பேனர் இல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி! நன்றி! என எழுதப்பட்டது இருந்தது. 

இந்நிலையில் பாஜக மாநில தலைவரும் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான எல். முருகனுக்காக வைக்கப்பட்ட பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பேனரை அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் வேண்டுமென்றே எல். முருகனின் முகத்தில் மார்க் போட்டதாக பாஜக தொண்டர்கள் கூறி வருக்கிறனர். 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News