தென்காசியில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே குடும்பத்தகராளில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் தற்கொலை செய்து கொண்டார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2023, 02:00 PM IST
  • மீனாவின் நடத்தையில் முருகன் சந்தேகம் அடைந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
  • மீனா தீக்குளிக்க முயன்றும், விஷம் அருந்தியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தென்காசியில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை! title=

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள ஆத்துவழி ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் முருகன். டிப்பர் லாரி டிரைவர். இவரது மனைவி மீனா (வயது 28). இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இருவரும் வாதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  மீனாவின் சொந்த ஊர் மதுரை பழங்காநத்தம் ஆகும். திருமணத்திற்குப் பின்னர் ஆத்துவழியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு  தியா முமீனாள் (6), முகிஷா முமீனாள் (2) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களில் தியா முமினாள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், மீனாவின் நடத்தையில் முருகன் சந்தேகம் அடைந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனா தீக்குளிக்க முயன்றும், விஷம் அருந்தியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும் முருகனில் சந்தேகம் நீங்கவில்லை. இந்நிலையில் இன்று மீனா அப்பகுதியில் உள்ள கிணற்றிற்கு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார். கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் வீசி கொலை செய்த மீனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் படிக்க | சென்னை தண்டையார்பேட்டையில் மனைவியை கொன்ற கணவன் கைது!

இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கோழி இட்ட மெகா சைஸ் முட்டை! கோவையில் நடந்த அதிசயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News