எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை திருகோணமலை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்

Written by - க. விக்ரம் | Last Updated : May 2, 2022, 02:40 PM IST
  • இலங்கை மீனவர்கள் கைது
  • எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள்
  • இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடலோர காவற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது title=

இந்திய கடற்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இந்திய எல்லைப் பகுதியில்  விசை படகு இருந்தது. அதனையடுத்து அப்படகில் வந்த 6 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்துக்கு இன்று அழைத்துவந்தனர்.

Srilaka Fishermen

தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், இலங்கை திருகோணமலையை  சேர்ந்த அனுரா என்பவருக்குச் சொந்தமான விசை படகில்  கடந்த 21ஆம் தேதி திருகோணமலையில் இருந்து மீன் பிடிக்க வந்தபோது  எல்லை தாண்டியது தெரியவந்தது. 

மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!

இதையடுத்து மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் படிக்க | ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட நடிகை சமந்தா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News