8 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி

Last Updated : Jul 22, 2017, 03:46 PM IST
8 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி title=

கடந்த ஒரு மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது அதிகரித்து வரும் நிலையில் நாகையை சேர்ந்த 8 மீனவர்களை நள்ளிரவில் சிறைபிடித்துள்ளனர்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும், 8 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். 

மீனவர்கள் 8 பேரும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் மீது வழக்குபதிவு செய்து இன்று சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே தமிழகம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 81 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News