ஸ்டெர்லைட் வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் செய்த தலைமை நீதிபதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 11, 2019, 05:43 PM IST
ஸ்டெர்லைட் வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் செய்த தலைமை நீதிபதி title=

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்தாண்டு சீல் வைக்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் பட்டியலிட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவித்தார். ஸ்டெர்லைட் வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருப்பதால், தற்போது இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனவும் விளக்கம் அளித்தார். மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு நீதிபதி சசிதரன் பரிந்துரை செய்தார்.

இதனை தொடர்ந்து, ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியதால், இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடுமாறு தலைமை நீதிபதியிடம் வேதாந்தா நிறுவனமும் கோரிக்கை வைத்தது. 

இந்தநிலையில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வுக்கு மாற்றம் செய்தார் தலைமை நீதிபதி வி.கே தஹில் ரமணி.

Trending News