கோடை விடுமுறை: ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Last Updated : Mar 16, 2019, 11:06 AM IST
கோடை விடுமுறை: ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்! title=

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடைபெறும் மூன்றாம் பருவ பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 13-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, ஏப்ரல் 14 முதல் 50 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 12ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 14 முதல் 50 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி திறந்த அன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

Trending News