திராவிட மாடல் வஞ்சிக்காது உதவி செய்யும் - அமைச்சர் எ.வ.வேலு

திராவிட மாடல் ஆட்சி யாரையும் வஞ்சிக்காது அனைவருக்கும் உதவி மட்டுமே செய்யும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 10, 2022, 05:32 PM IST
  • திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது
  • அதில் அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டார்
  • திராவிட மாடல் அனைவருக்கும் உதவி செய்யும் என உறுதியளித்தார்
திராவிட மாடல் வஞ்சிக்காது உதவி செய்யும் - அமைச்சர் எ.வ.வேலு title=

திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட 13 துறைகளின் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேசிய அமைச்சர் வேலும், “13 துறைகளில் 3662 குடும்பங்களுக்கு 6.35 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதுதான் அனைவருக்கும் சமமான ஆட்சி. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி யாரையும் வஞ்சிக்காது. அனைவருக்கும் உதவி மட்டுமே செய்யும். ஏழை எளிய மக்கள், நடுத்தரம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் அனைத்துத் திட்டங்களும் சென்றடையும் நோக்கில்தான் சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவருகிறது.

Velu

தமிழகத்தின் தாயாக தமிழக முதல்வர் இருந்து புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவி குழு கடன் திட்டம், நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என பல்வேறு திட்டங்களை கொண்டுவருவதுதான் தமிழக முதல்வரின் எண்ணம்.

மேலும் படிக்க | 'இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தை முதலில் சீரமைத்தது நான்தான்': ராமதாஸ் பெருமிதம்

எந்தக் கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக நன்மை பயக்கும் வகையில் தமிழக அரசு இருக்கிறது. தமிழக மக்களுக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழர்களின் ஆட்சி இது” என்றார்.

மேலும் படிக்க | ராகுலின் நடைபயணம் மக்களை ஒருங்கிணைக்கும் - நாராயணசாமி உறுதி

இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News