திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் உள்வாங்கிய கடல்.!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையில் 200 அடி தூரம் கடல் உள்வாங்கியது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 4, 2022, 04:05 PM IST
  • திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்நீர்
  • மூன்று நாட்களாக தொடர்வதால் புனித நீராட அலைகள் இல்லாத சூழல்
  • பாறைகளின் மீது ஏறி நின்றி செல்ஃபி எடுத்து பக்தர்கள் கொண்டாட்டம்
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் உள்வாங்கிய கடல்.! title=

ஆன்மீக சுற்றுலா கடற்கரைத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்வர். மலைமுகட்டில் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு உள்ளூர் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். முருகனை தரிசித்துவிட்டு கடற்கரைக்குச் சென்று நீராடி வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுவர். கோவில் வாசலில் இருந்து கடற்கரையைக் காணும் அழகை கண்டுரசிப்பதற்கே தனிக்கூட்டம் கூடும். 

மேலும் படிக்க | திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து!

இந்நிலையில், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூரில் குவிந்தனர். முருகரை தரிசித்துவிட்டு கடலில் புனித நீராடுவதற்காக கடற்கரைக்கு வந்த போது பக்தர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடல்நீர் கிட்டத்தட்ட 200 அடிக்கும் மேல் உள்வாங்கி இருந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமாவாசை அன்று கடல் நீர் உள்வாங்கியது. அது போன்று இன்று மீண்டும் கடல் நீர் உள்வாங்கியுள்ளது. கடந்த முறை 100 அடி  தூரம்  உள்வாங்கிய கடல்நீர், நேற்று 200 அடி தூரத்திற்கு மேல் உள்வாங்கி இருந்தது. இன்று அதிகாலையும் உள்வாங்கியதால் கடலுக்குள் காணப்படக்கூடிய  பாறைகள் வெளியே தெரிந்தன. நீராடுவதற்காக வந்த பக்தர்கள் அலைகள் இல்லாத கடலில் பாறைகளின் மீது  ஏறி நின்று குடும்பத்துடன்  புகைப்படம் எடுத்து வருகின்றனர். மேலும், பாறைகளின் மேல் உள்ள சிப்பி, முத்துக்களையும் பொறுக்கி எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் திடீரென கடல்நீர் உள்வாங்குவதும், திடீரென நிரம்புவதுமாக இருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | திருச்செந்தூரில் மாசித் தேரோட்டம்; அலையென திரண்ட மக்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News