கள்ளக்காதலனுக்காக கணவரை தீர்த்து கட்டிய கொலைக்கார மனைவி..!

கள்ளக்காதலனுக்காக மனைவியே கணவரை திருப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வேலை முடிந்து வீட்டு புறப்பட்டவர் பிணமான சம்பவத்தின் முழு பின்னணி இதோ...

Written by - Gowtham Natarajan | Last Updated : May 7, 2022, 03:34 PM IST
  • ரகசிய காதலனுடன் நெருங்கி பழகிய பெண்
  • கணவரை தீர்த்து கட்ட துணிந்த கொடூரம்
  • காதலர்கள் இருவரும் சிக்கியது எப்படி ?
கள்ளக்காதலனுக்காக கணவரை தீர்த்து கட்டிய கொலைக்கார மனைவி..!  title=

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான கோபால். இவருக்கு சுசீலா என்பவருடன் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி கம்பெனியில் இருந்து வீடு திரும்பிய கோபால் போகும் வழியில் கடைஅருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கோபாலை சுற்றி வளைத்தனர். சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார், சுதாரிப்பதற்குள் சுற்றி வளைத்தவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோபாலை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். கழுத்து, வயிறு, மார்பு என உடலில் 13 முறை குத்து விழுந்ததில் நிலைத்தடுமாறி போனார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்து போனார்,கோபால்.

tiruppur gopal murder,tirupur gopal murder, திருப்பூர் கோபால் கொலை

கொலையை நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் வரவழைத்து சம்பவ இடத்தில் சோதனை செய்திருக்கிறார்கள். கிடைத்த தடயங்களை சேகரித்து கொண்டவர்கள், கொலை குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், 3 நாட்களுக்கு பிறகு கொலைக்கான காரணம் குறித்து தெரியவர போலீசார் மிரண்டு போயிருக்கிறார்கள்.

tiruppur gopal murder,tirupur gopal murder, திருப்பூர் கோபால் கொலை

இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த போதிலும் கோபால், சுசீலாவின் இல்லற வாழ்க்கை அவ்வளவு அமைதியாக கடந்துவிடவில்லை. காரணம், இன்னொரு ஆண் மீதான சுசீலாவின் காதலே. சுசீலா, பனியம் கம்பெனியில் வேலைபார்த்து வந்த போது அதே கம்பெனியில் பணி புரிந்து வந்த மாரீஸ் என்பவருடம் நட்பாக பழகியிருக்கிறார். நாளடைவில் இருவருக்கிடையேயும் அது தாகத உறவாக உருவெடுக்க அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகியிருக்கிறார்கள். இதனால் கணவர் கோபால் மீது மனைவி சுசீலாவின் காதல் முற்றிலும் கரைந்து போனது. இதற்கிடையே, மாரீஸ் மீதான சுசீலாவின் அலாதியான காதல் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசையை தூண்டியது. வாய் விட்டு அதை கேட்க, ஏற்கனவே திருமணமான பெண்னை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று நியாயம் பார்த்திருக்கிறார், மாரீஸ். அதற்கு சுசீலா கொடுத்த பதில்தான் கோபாலின் மரணத்துக்கு காரணமாகி போனது. ஆம், கணவர் கோபாலை கொலை செய்து விடலாம் என்று ரகசிய காதலன் மாரீஸ்க்கு ஐடியா கொடுத்திருக்கிறார், சுசீலா.

tiruppur gopal murder,tirupur gopal murder, திருப்பூர் கோபால் கொலை

கேட்டதும் அடுத்தகட்ட வேலையை கையில் எடுத்த மாரீஸ், திருச்சியில் இருந்து கூலிப்படையினரை இறக்கியிருக்கிறார். பல நாட்கள் நோட்டமிட்டு சுசீலா உறுதுணையோடு திட்டமிட்டபடி கோபாலை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் போலீசாரின் துரித விசாரணையில் கள்ளக்காதலர்கள் இருவரும் கூலிப்படையினரோடு சேர்ந்து வசமாக சிக்கிவிட்டனர். இதனையடுத்து கோபாலை கொலை செய்த சுசீலாவின் காதலன் மாரீஸ், மற்றும் கூலிப்படையினரை சேர்ந்த 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

tiruppur gopal murder,tirupur gopal murder, திருப்பூர் கோபால் கொலை

மேலும் படிக்க | பரமக்குடி : பச்சிளம் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை

கொலைக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட சுசீலா தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் மாவட்டம் முழுக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சுசீலாவின் கைதுக்கு பிறகே, கோபாலின் கொலையில் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், கள்ளக்காதல் குடும்பத்தை மறைக்கும் என்பார்கள்... அதேகாதல் சுசீலாவின் வாழ்க்கையில் கட்டிய கணவரையே அழித்துவிட்டது..அதுதான் கொடூரத்தின் உச்சம்..!

மேலும் படிக்க | கோவையில் கெட்டுப்போன சிக்கன் கறிகள் - அம்பலமாகும் ஹோட்டல் ரகசியங்கள்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News