TN Lockdown: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு, நாளை அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் ஊரடங்கை நீட்டிக்க சுகாதாரதுறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 4, 2021, 03:39 PM IST
  • தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
  • தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை
  • தெரிகிறது. தொற்று குறைவான பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு வழங்கலாம்
TN Lockdown: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு, நாளை அறிவிப்பு வெளியீடு title=

Tamil Nadu Lockdown: கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதில் இருந்து, தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக இந்த வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு செய்யபட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா (Corona Spread) பரவல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு (Full Lockdown) பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் இந்த ஊர் அடங்கிஊரடங்கை பொருட்படுத்தவில்லை என்பதால் , மேலும் ஒரு வாரம் காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்த ஊரடங்கு பயனால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது.

ALSO READ | ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் 14 மளிகை பொருட்களின் முழு விவரம்

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (TN CM MK Stalin) இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் அதாவது கோவை திருப்பூர், ஈரோடு நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. தொற்று குறைவான பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் (Tamil Nadu) ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 36,000-ஐ கடந்து அச்சுறுத்திய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, இது படிப்படியாக குறைந்து 25,000 என்ற அளவுக்கு வந்துள்ளது. 

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு உள்ள போதிலும், மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு தேவையாக காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவை தடையின்றி கிடைக்க பலவித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ | இன்றைய பாதிப்பு நிலவரம்: தமிழ்நாட்டில் 25,000க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News