கொரோனா நிலவரம்: இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்தது; தமிழகத்தில் 5,980 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் இன்று 5,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 22, 2020, 07:29 PM IST
கொரோனா நிலவரம்: இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்தது; தமிழகத்தில் 5,980 பேருக்கு பாதிப்பு title=

சென்னை: தமிழகத்தில் இன்று 5,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124,051 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 80 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் இன்று 5,603 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6,420 ஆக உயர்ந்தது.

இன்றைய நிலவரம்: 22-08-2020
கொரோனா பாதிப்பு -  5,980
சென்னை - 1,294
மரணம் - 80
குணமடைந்தவர்கள் - 5,603

No description available.

 

No description available.

 

No description available.

 

No description available.

 

Trending News