இன்றைய கொரோனா நிலவரம்: தமிழகத்தில் 6,352 பேருக்கு தொற்று உறுதி; 87 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 6,352 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,285 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 29, 2020, 06:18 PM IST
இன்றைய கொரோனா நிலவரம்: தமிழகத்தில் 6,352 பேருக்கு தொற்று உறுதி; 87 பேர் உயிரிழப்பு title=

சென்னை: தமிழகத்தில் இன்று 6,352 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,285 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 87 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் இன்று 6,045 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,15,484 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்தது.

இதுவரை மொத்தம் 3,55,727 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 52,726 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்றைய நிலவரம்: 29-08-2020
கொரோனா பாதிப்பு - 6,352
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 52,726
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 80,988
குணமடைந்து வெளியேறியவர்கள் - 6,045
இறப்பு - 87

ALSO READ |  தமிழகத்தில் மேலும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படவுள்ளது; போக்குவரத்து இயக்கப்படும்!

 

No description available.

 

No description available.

No description available.

No description available.

 

Trending News