பொங்கல் பரிசு வழங்க இன்று கடைசி நாள்! முந்துங்கள் மக்களே!

பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு இன்று மாலை 6 மணி வரை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated : Jan 13, 2020, 11:58 AM IST
பொங்கல் பரிசு வழங்க இன்று கடைசி நாள்! முந்துங்கள் மக்களே! title=

பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு இன்று மாலை 6 மணி வரை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 29 அன்று சென்னையில் நடந்த பொங்கல் பரிசு பேக்கேஜிங் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi k Palaniswami) பொங்கல் பரிசு வழங்குவதை தொடங்கி வைத்தார். அன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரிசி பெறும் 2.5 கோடி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000. நியாய விலைக்கடைகளில் இலவச பொங்கல் பரிசு மூட்டைகளை வழங்க தமிழக அரசு நிர்ணியம் செய்துள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அதனுடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் இருக்கும். அன்று முதல் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு (Pongal Gift) வழங்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் பொங்கல்பரிசு வழங்கப்படவில்லை.

அந்தவகையில் அந்த ஆண்டு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி (இன்று) வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்க அரசு உத்தரவிட்டு இருந்தது. 

இதற்காக மக்கள் வரிசையாக நின்று, ஆர்வத்துடன் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் 1,000 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது.

ஒரு கோடியே 97 லட்சம் பேர் அரிசி பெறக்கூடிய ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு நேற்றுடன் வினியோகிக்கப்பட்டது.

இதுவரையில் வாங்காதவர்கள், வெளியூர் சென்றவர்கள், முறையான ஆவணங்களை கொடுக்காமல் இருந்தவர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல்பரிசு வினியோகிக்கப்படும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News