பாசான பருவ சாகுபடிக்கு ஜன., 12-ம் தேதி தண்ணீர் திறப்பு:ஈ.பி.எஸ்!

ஜன., 12-ம் தேதி முதல் வினாடிக்கு 100 கன அடி வீதம் பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.   

Last Updated : Jan 8, 2018, 04:17 PM IST
 பாசான பருவ சாகுபடிக்கு ஜன., 12-ம் தேதி தண்ணீர் திறப்பு:ஈ.பி.எஸ்! title=

பாசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது:- திருநெல்வேலி மாவட்டம், வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசான பருவ சாகுபடிக்கு 12.01.2018 முதல் வினாடிக்கு 100 கன அடி வீதம், மொத்தம் 1598.82 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். 

இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9592.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Trending News