ராஜ்பவனில் நடந்த அதிசயம்! கூலித் தொழிலாளி மகள் ஷப்ரீன் இமானா மாணவிக்காக திறந்த கதவுகள்

Raj Bhavan Rules: ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கூலித் தொழிலாளி மகளுக்காக விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கல்வி தான். வாருங்கள் அதைக்குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 10, 2023, 04:18 PM IST
  • தமிழ் வழியில் கல்வியில் பயின்று சாதனை படைத்த மாணவிக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை.
  • வரலாற்றில் முதல் முறையாக ஏழை மாணவி குடும்பம் தங்குவதற்காக திறக்கப்பட்ட ராஜ்பவன் விருந்தினர் மாளிகை.
  • உயர் கல்விச் செலவை அரசு ஏற்கும் என்று மாநில அளவில் முதல் இடம் பிடித்த நந்தினியை உற்சாகப்படுத்தி முதல்வர்.
ராஜ்பவனில் நடந்த அதிசயம்! கூலித் தொழிலாளி மகள் ஷப்ரீன் இமானா மாணவிக்காக திறந்த கதவுகள் title=

சென்னை: ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் ராஜ்பவன் விருந்தினர் மாளிகை, தமிழக வரலாற்றில் முதல் முறையாக நேற்று ஒரு ஏழை மாணவி குடும்பம் தங்குவதற்காக திறக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வரை சந்தித்த மாணவி நந்தினி:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, வழக்கம் போல மாணவிகளே அபார சாதனையாளர்களாக அறியப்பட்டுள்ளனர். மாநில அளவில் முதல் இடம் (600க்கு 600 மார்க்) பெற்ற திண்டுக்கல், அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி நேற்று முன்தினம் சென்னை வந்தார். தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உயர் கல்விச் செலவை அரசு ஏற்கும் என்று நந்தினியை உற்சாகப்படுத்தி முதல்வர் அனுப்பி வைத்தார்.

ஏழை மாணவிக்காக திறக்கப்பட்ட விருந்தினர் மாளிகை:
இதன் அடுத்த நிகழ்வாக பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நடத்தினார். கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் இருந்து மாணவி ஷப்ரீன் இமானா பெற்றோருடன் நேற்று சென்னை வந்தார். அவர், ராஜ்பவனில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். விதிமுறைப்படி இங்கே தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என்று ராஜ்பவன் அதிகாரிகள், கவர்னரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம், மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் பெற்ற மாணவி. ஏழை கூலித் தொழிலாளியின் குடும்பம். தமிழ் வழியில் கல்வியில் பயின்று சாதனை படைத்துள்ளார். அவருக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை என்று கவர்னர் உறுதிபடத் தெரிவித்தபிறகே, மாணவி ஷப்ரீன் இமானா குடும்பத்துக்காக ராஜ்பவனில் உள்ள விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “ஆடிட்டர் ஆக ஆசை” 600க்கு 600 மார்க் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவியின் கனவு!

தமிழ் வழியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி ஷப்ரீன் இமானா: 
மாணவி ஷப்ரீன் இமானா குறித்து கடையநல்லுார் ஹிதாயத்துல் இஸ்லாம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆமீன்,  நமது நிருபரிடம் கூறியதாவது, "எங்களது தொடக்கப் பள்ளி 99 ஆண்டுகளை கடந்து 100 ஆண்டை நோக்கி பயணிக்கிறது. மாணவி ஷப்ரீன் இமானா, எங்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் டூ தேர்வில் 600க்கு 590 மார்க் பெற்றுள்ளார். தமிழ் வழியில் கல்வி பயின்று மாநில அளவில் முதலிடமும், ஒட்டு மொத்த அளவில் மாநிலத்தில் 3ம் இடமும் பெற்றுள்ளார். தென்காசி மாவட்டத்தில் தமிழ் வழியில் முதல் ரேங்க் பெற்றுள்ளதுடன், பர்ஸ்ட் குரூப்பில் பயின்று முதல் இடம் பெற்றவர் இவரே. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 100 மார்க், கணிதத்தில் 99, ஆங்கிலத்தில்  96, தமிழில் 95 மார்க் பெற்றுள்ளார்.

மாணவியின் போக்குவரத்து செலவை ஏற்றுக்கொண்ட ராஜ்பவன்:
ராஜ்பவனில் இருந்து, நேற்று (9ம் தேதி) பிற்பகலில், கவர்னருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மாணவி ஷப்ரீன் இமானாவை பெற்றோருடன் சேர்ந்து சென்னைக்கு அனுப்பி வையுங்கள் என்று தகவல் வந்தது. ஏழ்மையான குடும்பம். கூலித் தொழிலாளியான அவரை எப்படி உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைப்பது என்று நாங்கள் யோசிப்பதற்கு முன்பே, மாணவியின் போக்குவரத்து செலவை ராஜ்பவனே ஏற்றுக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றனர். உடனே கார் பிடித்து மாலை 6 மணிக்கு அனுப்பி வைத்தோம். மாணவியின் தந்தை சிந்தாமதார் கூலித் தொழிலாளி. முதுகெலும்பு பிரச்னையால் வீட்டில் படுக்கையில் உள்ளார். எனவே மாணவியுடன் அவரது தாய் சிராஜினிகா, மாமா அகமது அப்சல் ஆகியோர் காரில் இன்று (10ம் தேதி) காலை 7 மணிக்கு ராஜ்பவன் வந்து சேர்ந்து விட்டதாகவும், அங்கேயே அவர்களுக்கு தங்கி, தயாராக ரூம் கொடுத்துள்ளதாக கூறினர். மிகப் பெருமையாக உள்ளது என்றார்.

மேலும் படிக்க: ’எதிரகளே இல்லை’ ஜெயலலிதா பாணியில் விளாசிய துரைமுருகன்: ஆளுநர் மீது ஆவேசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News