ரூ.199க்கு இவ்வளவு ஆபர்களா? அசத்தும் ஏர்டெல்லின் புதிய பிளான்!

ரூ.199 விலையில் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன், மொத்தமாக 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 14, 2022, 04:21 PM IST
  • புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல்.
  • 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
  • 3 ஜிபி டேட்டாவை ஒரு மாதத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ரூ.199க்கு இவ்வளவு ஆபர்களா? அசத்தும் ஏர்டெல்லின் புதிய பிளான்!  title=

ஒரு மாதகாலம் வேலிடிட்டியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.199 விலையில் 30 நாட்கள் செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 3 ஜிபி டேட்டாவுடன் தினசரி அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.  ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.199 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்னர் கடந்த 2021ம் ஆண்டில் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் உயர்வதற்கு முன் ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கியது, ஆனால் இதன் வேலிடிட்டி 24 நாட்கள் வரையில் மட்டுமே வழங்கப்பட்டது.  

மேலும் படிக்க | அட, நம்புங்க நிஜம்தான்!! பிளிப்கார்ட்டில் ரூ. 7000-க்கும் குறைவாக ஸ்மார்ட் டிவி விற்பனை 

கடந்த 2021ம் ஆண்டு வரை ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் ரூ.199 திட்டத்தை வழங்கியது.  பின்னர் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தத் திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டது.  மேலும் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கியதால் ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கத் தொடங்கியது.  இருப்பினும், இப்போது ஏர்டெல் அதன் ரூ.199 திட்டத்தை மீண்டும் நீண்ட கால் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது ஆனால் டேட்டாவின் வரம்பை சற்று குறைத்துள்ளது. 

ஏர்டெல் ரூ.199 திட்டம்:

ரூ.199 விலையில் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன், மொத்தமாக 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.  அதுமட்டுமல்லாது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் ஆகியவற்றின் கூடுதல் நன்மைகளையும் இது வழங்குகிறது.  தினசரி 300 எஸ்எம்எஸ் வரம்பு முடிந்துவிட்டால் அதற்கு மேல் செய்யப்படும் ஒரு எஸ்எம்எஸ்-க்கு ரூ.1 மற்றும் ரூ.1.5 ஜிஎஸ்டி சேர்த்து ஏர்டெல் வசூலிக்கும்.  அதேபோல மொத்த 3ஜி டேட்டா முடிந்துவிட்டால் அடுத்து பயன்படுத்தும் 1 எம்பி டேட்டாவிற்கு 50 பைசா வசூலிக்கும்.  மேலும் வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் இருந்தாலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மட்டுமே அனுப்ப முடியும்.  என்னதான் ஏர்டெல் ஒரு மாத வேலிடிட்டியுடன் இந்த திட்டத்தை வழங்கினாலும், தினசரி அதிவேக டேட்டாவை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் வழங்கும் மொத்த 3ஜிபி டேட்டா பொருந்தாது.  அதுவே தினசரி அதிவேக டேட்டா விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லின் ரூ.239 திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.  இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் அன்லிமிடெட் அழைப்புகளும் வழங்கப்படுகிறது, ஆனால் இந்த திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

மேலும் படிக்க | இதை மட்டும் செய்தால் யூடியூப் அப்டேட்டுகளை முன்னரே தெரிஞ்சுக்கலாம்...! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News