15 மொழிகளில் கொரோனா வைரஸ் கட்டுக்கதைகளை நீக்குவதற்கான பணியில் “Hoax Busters” குழு

ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மராத்தி, தமிழ், தெலுங்கு, அசாமி, ஒடியா, மணிப்பூரி, நேபாளி, பஞ்சாபி, கொங்கனி, உருது, காசி, கன்னடம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட 15 மொழிகளில் 18 போஸ்டர்களை இந்த குழு வெளியிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 6, 2020, 07:02 PM IST
15 மொழிகளில் கொரோனா வைரஸ் கட்டுக்கதைகளை நீக்குவதற்கான பணியில் “Hoax Busters” குழு title=

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை நீக்க இந்தியா முழுவதிலும் இருந்து விஞ்ஞானிகள், கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் அடங்கிய குழு ஒன்று COVID-19 வைரஸைப் பற்றிய தவறான தகவல்களை நீக்க “hoaxbusters” அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்திய விஞ்ஞானிகளின் பதில் கோவிட் -19 (ஐ.எஸ்.ஆர்.சி - ISRC) என்ற குடையின் கீழ் இந்த முயற்சி கடந்த வாரம் தொடங்கியது. ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மராத்தி, தமிழ், தெலுங்கு, அசாமி, ஒடியா, மணிப்பூரி, நேபாளி, பஞ்சாபி, கொங்கனி, உருது, காசி, கன்னடம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட 15 மொழிகளில் 18 போஸ்டர்களை இந்த குழு வெளியிட்டுள்ளது. .

"ஐ.யு.சி.ஏ.ஏ-புனே [IUCAA-Pune] மற்றும் ஐ.ஐ.டி-பம்பாயைச் [IIT-Bombay] சேர்ந்த வானியலாளர்கள் (Astronomy) உட்பட விஞ்ஞானிகள் அனைத்து மொழிகளிலும் படங்களை உருவாக்கும் செயல்முறையை தானியக்கமாக்குவதற்கு பணிபுரிந்தனர்" என்று ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் வானியல் இயற்பியலாளரும் அறிவியல் கல்வியாளருமான அனிகேட் சூலே கூறினார்.

கோவிட் -19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது போல, அதுக்குறித்து தவறான தகவலை பரப்புவதை தடுப்பது மிக முக்கியமானது என இந்த குழு நம்புகிறது.

“கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டது”.. “மாட்டு சிறுநீர் அல்லது மாட்டு சாணம் பயன்படுத்துவது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.. இந்தியாவில் அதிக வெப்பமான காலநிலை இருப்பதால் வைரஸ் பரவ முடியாது.. இந்த நோய் குறித்து ஜோதிடர்கள் கூறும் மூடநம்பிக்கை போன்ற வதந்தி மற்றும் புரளிக்காரர்கள் சமாளிக்க முயற்சிக்கும் இந்த அமைப்பு.

இந்த குழு ஒவ்வொரு கட்டுக்கதையையும் சரியான தகவல்கள், நியாயமான விளக்கங்கள் மற்றும் அறிவியல் சான்றுகளுடன் வெளியிடுகிறது.

போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. மார்ச் 24 அன்று வெளியிடப்பட்ட லாக்-டவுன் உத்தரவில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ -  National Disaster Management Authority) பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 (Disaster Management Ac) இன் பிரிவு 54 ஐக் குறிக்கிறது. 

இது பின்வருமாறு கூறுகிறது: “பேரழிவு அல்லது அதன் தீவிரம் அல்லது அளவு குறித்து தவறான தகவல் அல்லது எச்சரிக்கையை யார் செய்தாலும் அல்லது பரப்புகிறாரோ அவர்களுக்கு ஒரு வருடம் வரை அல்லது அபராதத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

திங்களன்று நிலவரப்படி, நாடு தழுவிய நாடெங்கும் உத்த்ரவின் 13 வது நாளில் இந்தியா நுழைகிறது, மேலும் 3,666 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளன. 291 பேர் குணமாகியுள்ள நிலையில், இதுவரை 109 பேர் இறந்துள்ளனர்.

Trending News