அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு வைகையில் தண்ணீர் திறப்பு!

கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக மதுரையில் அழகர் இறங்கும் விழாவிற்கு மூன்று நாட்கள் வைகை அணையை திறக்க பொதுப்பணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். 

Last Updated : Apr 17, 2018, 08:42 AM IST
அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு வைகையில் தண்ணீர் திறப்பு! title=

கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக மதுரையில் சித்திரைத் திருவிழாவில் அழகர் இறங்கும் விழாவிற்கு மூன்று நாட்கள் வைகை அணையை திறக்க பொதுப்பணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். 

பெரியாறு அணையில் நேற்று நீர்மட்டம்11410 அடி. நீர்வரத்து 406 கனஅடி இருந்தது. வெளியேற்றம் 600 கனஅடியாகும். இந்த நீர் வைகை அணைக்கு 249 கனஅடி வருகிறது. 

கடந்தாண்டு இதே நாளில் 24.38 கனஅடி மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த ஆண்டை விட 9.41 அடி கூடுதலாகவுள்ளது

எனவே, மதுரையில் அழகர் இறங்கும் விழாவிற்கு வைகை அணையை மூன்று நாட்கள் திறக்க பொதுப்பணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். 

இதன் மூலம், ஏப்., 27 அணை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Trending News