கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்

கடந்த 2 ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பெயரில் சீனா அதிர்ச்சி முறைகளைப் பயன்படுத்துகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 3, 2022, 07:41 AM IST
  • ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸின் புதிய தொற்று
  • சீனாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம்
  • சீன சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியம்
கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல் title=

கொரோனா வைரஸை உலகுக்கு பரிசாக வழங்கிய சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சில விசித்திரமான முறைகளை சீனா பயன்படுத்துகின்றனர், இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது சீனாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து, பாலிதீனில் அடைத்து பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறைக்கு அழைத்துச் சென்ற ஊழியர்கள் அவரைப் பரிசோதித்தபோது முதியவரின் இதயத் துடிப்பு ஓடிக்கொண்டு இருந்தது. இதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது சீன சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சிய சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | IIT சென்னையில் எகிறும் தொற்று பாதிப்பு; மேலும் 32 பேருக்கு கொரோனா

 

 

மார்ச் 1 முதல் ஷாங்காய் இல் லாக்டவுன்
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, சுமார் 25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸின் புதிய தொற்று தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதனால், மார்ச் 1ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக, மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் பதிவிட்டு அரசுக்கு எதிராக மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்
ஞாயிற்றுக்கிழமை, ஷாங்காயில் 7333 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 32 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில், நிர்வாகம் மக்களைக் ககடுமையாகக் கட்டுப்படுத்துகிறது, இதனால் நகர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News