தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க பள்ளிகளில் ஆணுறைகளை இலவசமாக வழங்கும் திட்டம்!

இளைஞர்கள் மற்றும் பிற வயதுப் பிரிவினரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 10, 2022, 05:39 PM IST
  • பல இளம் பெண்கள் திட்டமிடப்படாத கர்ப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பள்ளிகளில் இலவச ஆணுறை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும்.
தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க  பள்ளிகளில் ஆணுறைகளை இலவசமாக வழங்கும் திட்டம்! title=

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ் மிக முக்கியமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. உயர் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அறிவியலில் உலகின் பல நாடுகளை விட முன்னணியில் இருக்கும் பிரான்ஸ், தற்போது தேவையற்ற கர்ப்பம் அதிகரித்து வருவதால் கலக்கமடைந்துள்ளது. 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களில், தேவையற்ற கர்ப்பம் மிக வேகமாக அதிகரித்துள்ள நிலையில், அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நேரடியாக தலையிட வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், பாதுகாப்பான பாலுறவை ஊக்குவிக்கவும், சிறு வயதிலேயே கர்ப்பம் தரிக்கும் அபாயத்தைக் குறைக்கவும், இங்குள்ள பள்ளிகளில் இலவச ஆணுறை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆணுறை இலவசமாக வழங்கும் திட்டம் 

'பிரான்ஸ் 24' செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மேக்ரோனின் உத்தரவை அமல்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தனது நாடு மரபுகளுக்குக் கட்டுப்படவில்லை என்று மேக்ரோ கூறினார். சுதந்திரமாகச் சிந்திக்கும் நாட்டில் அனைவரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு. மக்ரோன் கூறுகையில், '18 முதல் 25 வயதுடைய அனைத்து இளைஞர்களுக்கும் அரசு மருந்தகங்கள் மூலம் இலவச ஆணுறைகளை வழங்கும். இது உண்மையில் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க ஒரு சிறிய புரட்சி. இந்த ஆண்டு முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் இலவச கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களை வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க | உலகப் பணக்காரர் என்ற கிரீடத்தை எலான் மஸ்கிடம் இருந்து பறித்த Bernard Anault!

பாலியல் கல்வியை ஊக்குவிக்க அறிவிப்பு

மேக்ரோன் மேலும் கூறுகையில், 'பாலியல் கல்வி தொடர்பான முடிவுகள் சிறப்பாக இல்லை. சூழ்நிலைகளும் யதார்த்தமும் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. எங்கள் ஆசிரியர்களுக்கு கல்வி கற்பதற்கு சில சிறந்த தேர்வுகளை நாம் செய்ய வேண்டிய ஒரு பகுதி இதுவாகும். சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறேன். அதனால்தான் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை தடுக்க மாஸ்க் அணிந்துள்ளேன் என குறிப்பிட்டார்.

உண்மையில் பல இளம் பெண்கள் திட்டமிடப்படாத கர்ப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் என்ன செய்வது அல்லது அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று அவர்களுக்குப் புரியவில்லை. மேலும், சில பெண்கள் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கருக்கலைப்பு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் அதன் முறைகள் அல்லது சிகிச்சைகளை பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த இலவச ஆணுறைக்கான நிதி ஏற்கனவே பிரான்சின் தேசிய சுகாதாரத் திட்டத்தால் வழங்கப்பட்டது . இருப்பினும், இதுவரை மருத்துவர்கள் இதைப் பயன்படுத்த அறிவுறுத்தியவர்களுக்கு மட்டுமே இது இலவசமாகக் கிடைத்தது.

மேலும் படிக்க | குளிர்கால அதிசய உலகம் காஷ்மீருக்கு வாங்க! களை கட்டுகிறது தால் ஏரி படகுத் திருவிழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News