தீவிரவாதத்தை பரப்புவதாக புகார்; பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யாவில் தடை !

'தீவிரவாத நடவடிக்கைகள்'  தொடர்பான வழக்கில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மாஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2022, 11:33 AM IST
  • ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தடைசெய்யப்பட்டுள்ளது
  • ரஷ்ய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
  • இரண்டு தளங்களும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
தீவிரவாதத்தை பரப்புவதாக புகார்; பேஸ்புக்,  இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யாவில் தடை ! title=

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர்  27வது நாளாக தொடர்கிரது. அதிபர் புடினின் உஜ்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. உலகிலேயே அதிக தடைகளை சந்திக்கும் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இந்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தடை

'தீவிரவாத நடவடிக்கைகள்'  தொடர்பான வழக்கில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மாஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரண்டு சமூக ஊடக தளங்களின் தாய் நிறுவனமான 'மெட்டா'வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு

ரஷ்யாவின் ட்வார்ஸ்கோய் மாவட்ட நீதிமன்றம், ‘மெட்டா’ (Meta) நிறுவத்தை சட்டவிரோதமாக்கக் கோரும் வழக்கறிஞர்களின் மனுவை ஏற்றுக்கொண்டு,  'தீவிரவாத நடவடிக்கைகளுக்காக' பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைத் தடை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க | துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்

மெட்டா  நிறுவனத்திற்கு தடை

உக்ரேனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை பற்றிய போலிச் செய்திகள் மற்றும் ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்கள தூண்டு செய்திகளை  அகற்றுவதற்கான ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூக ஊடக  நிறுவனங்கள் மீது வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர். நீதிமன்றத்தின் தீர்ப்பால் ரஷ்யாவில் அலுவலகங்களை திறக்கவும், வணிகம் செய்யவும் 'மெட்டா' நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக கருத்து கேட்க அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டபோது, ​​​​மெட்டா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் தொடரும் நிலையில், ரஷ்யா இப்போது உக்ரைன் மீது கொடிய ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. மிகவும் ஆபத்தான சிர்கான் ஏவுகணையை ஏவுவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் போரில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற வகையில் மீண்டும் ரஷ்யா  எச்சரித்துள்ளது எனலாம். சிர்கான் ஏவுகணை மூலம், லண்டனை 5 நிமிடங்களில் அழிக்கலாம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News