ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக அஜிங்கே ரஹானே நியமிப்பு!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு உள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 26, 2018, 03:49 PM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக அஜிங்கே ரஹானே நியமிப்பு!! title=

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. 

ஐ.பி.எல் தொடக்க விழா ஏப்ரல் 6-ம் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது.ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆட்டம் போடும் CSK! வைரலாகும் வீடியோக்கள்!

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியா அணி பீல்டிங் செய்த போது கேமரான் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது. 

அபதாரம் & நீக்கம்: ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித் காரணம் என்ன?

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணியின் தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் இருந்து ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் நீக்கியது.

இதனையடுத்து, இன்று ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத ராஜஸ்தான் அணி, ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் கலந்துக்கொள்கிறது. அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார்.

ரமணா பாணியில் சென்னை அணியின் மீம்ஸ் வீடியோ!!

ஆனால் அவரின் மீது புகார் வந்ததை அடுத்து, கேப்டன் பொறுப்பில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அஜிங்கே ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டதாக, அந்த அணி தெரிவித்துள்ளது. 

 

Trending News